இறைவன் படைப்பின் பிரம்மாண்டம் மலையும்,
பெண் சிலையும்
மனம் சிரிக்க இடம் தேடுகிறது
அறிவு சிந்திக்க இடம் தேடுகிறது
விடியல் சந்திக்க காலம் தேடுகிறது
பறவை பறக்க வானம் தேடுகிறது
மேகம் தவழ மலை தேடுகிறது
பெண்ணின் கண் தேடுகிறது காதலை
மலையோ? மழை மேகமோ? தீண்டும்
தென்றலோ?
யார் அங்கே? என் காதலை சொல்லி விடுங்கள்
அவனிடத்தில். அவனுக்காக
ஏங்கிய நாட்களையும்
அவன் இல்லாது கடக்கும்
எஞ்சிய நாட்களையும் பற்றி
அடர் கூந்தலும் அவள் சுடர் விழியும்
அடர்ந்த காடும் அதன் நிழலும்
ஒளிரும் சூரியனும்
அவன் செந்நிற கதிரும்
தீண்டும் தென்றலும் அதனால் சிலிரும்
மெய்யும்
பரந்த மலையும்
அங்கே வெண்பனி போர்வையும்
பசுமை வயலும் ஆங்கு திரியும் பறவைகளும்
நோக்குவது எதனை?
தேவலோகத்து இந்திரனல்ல பூலோகத்து
பிரம்மன் விவசாயியை
வெண்பனி போர்த்திய மலையை ரசிக்கும்
சேவ்வாடை அணிந்த மாது

No comments:
Post a Comment