கண்ணில் பட்டதெல்லாம் விண்மீனா
கண்ணில் பாடதவை பெண்மீனா
காதில் கேட்டதெல்லாம் செம்மொழியாம்
காதில் கேட்காதவை பொய்மொழியா
கையில் தொட்டதெல்லாம் பொன்னாம்
கையில் தொடாதவை புண்ணா
நாக்கில் பட்டதெல்லாம் சுவையாம்
நாக்கில் படாதவை மருந்தாம்
மூக்கில் முகர்ந்தெல்லாம் மணமாம்
மூக்கில் முகராதவை மண்ணாம்
மூங்கில் குழலை காற்று முகர்ந்தால் இசை
அது கண்களை கடத்தினால் காதல்
அது வாயை அசைத்தால் பாடல்
அது கைகளை மயக்கினால் நடனம்
அது காதில் புகுந்தால் ஒலியா?கவியா?
மழையா?

அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete