Thursday, March 2, 2023

கவியா? by Vidhya Nivash




கண்ணில் பட்டதெல்லாம் விண்மீனா 

கண்ணில் பாடதவை பெண்மீனா

காதில் கேட்டதெல்லாம் செம்மொழியாம்

காதில் கேட்காதவை பொய்மொழியா

கையில் தொட்டதெல்லாம் பொன்னாம்

கையில் தொடாதவை புண்ணா

நாக்கில் பட்டதெல்லாம் சுவையாம்

நாக்கில் படாதவை மருந்தாம் 

மூக்கில் முகர்ந்தெல்லாம் மணமாம்

மூக்கில் முகராதவை மண்ணாம்

மூங்கில் குழலை காற்று முகர்ந்தால் இசை 

அது கண்களை கடத்தினால் காதல்

அது வாயை அசைத்தால் பாடல் 

அது கைகளை மயக்கினால் நடனம் 

அது காதில் புகுந்தால் ஒலியா?கவியா?

மழையா?





2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...