Friday, March 31, 2023

மீனும் இரையும் by Vidhya Nivash

சின்னது முதல் பெரியது வரை மிக

 துல்லியமாக கண்ணாடி போல்

 தெரிந்த தண்ணீரில் இவ்வளவு

 மீன்களும் எங்கிருந்தது சின்ன

 சலனத்தில் உணவை வேட்டையாட

 கரையில் ஒதுங்கிய கண்ணாடி

 மீன்கள் உள்ளம் கவரும் அழகு

 கூட்டத்தில் ஒன்றை ஒன்று மோதாமல்

 அழகாக விலகிச் செல்ல தேடியது

 கிடைக்கவில்லை என்றதும் வந்த

 இடம் தெரியாமல் மறைய பார்க்கும்

 நமக்கு கண்வித்தை தான் ..


இரையை போட்ட மாத்திரத்தில் படை

 எடுத்து வந்தது. துணைக்கு நண்டு

 சிண்டு ,தலைவா முகர்ந்ததில் அது

 காய்ந்து போன ரொட்டி துண்டங்கள்

 .இதை உண்பதற்கு நம் மக்கிபோன

 உணவே மேல்.படையை திருப்பி

 நாட்டிற்கு விடுங்க.நொடியில் மறைந்த

 படை .

இரை கரை படை மறை.



 

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...