Sunday, February 11, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 வயோதிகத்தின் காரணமாய் நிஜ வாழ்வு ஒன்று 

உண்மையாய் கண்ணாடி பிம்பத்தில் 

 பிரதிபலிக்கிறது


 மணமானதிலிருந்து மனதாலும்

 மரணத்தாலும் இணை பிரியா தம்பதிகள்



மாலையிட்டவர்கள் மரணத்திலும் ஒன்றாகி

 புகைப்படத்திற்கும் ஒன்றாக மாலையிடும் தருணமாகி 

சொர்க்கத்தில் ஐக்கியமாகி 

நம்மை பிரம்மிக்க வைக்கும் காதல் ஜோடிகள்


 மணமானதால் பிணமான ஜோடியோ இவர்கள்?

 சாதிச் சண்டையால் உயிர்விட்ட

 காதலர்கள் இங்கே எலும்புக்கூடாய்  

எழ முடியாமல்

காதலுக்கு அழிவில்லை என்பதை 

பிறருக்கு பறை சாற்றவோ இந்த காட்சி?

அதுவும் ஒய்யார ஊஞ்சலில் மிகவும்

கம்பீரமாய்

இனி பறிக்க ஏதுமில்லை என்பது போல்


 இதயம் வேறென்றாலும் நிலை ஒன்றே இப்போது பிறர் காணும் போது


 இறந்த பின் ஆராய்ச்சிக்கு பின்னே உணர முடியும் இதில் ஆன் யார்? பெண் யாரென்று?

இதற்கிடையே எத்தனை ஏச்சுக்கள் பேச்சுக்கள்,

பாலினத்தில் உயர்ந்தவர் யாரென்று!


 வாழ்வின் கடைசி அத்தியாயம் புகைப்படமாக


 மலர்கள் பரிமாறப்பட்டு

மனங்கள் பகிரப்பட்டு

மரணங்களும் இலகுவாய்

பெறப்பட்டதோ?

உல்லாச பூமியில் பிறப்பு

பரிந்துரைக்கப்பட்டு

காவியமாய் மாறியதோ? 

சதையின்றி 

ஓர் உயிர், ஈருடல்

2 comments:

  1. காதல் மரணிப்பதில்லை ..மரணத்திலும் கூட 👌👌👌

    ReplyDelete
    Replies
    1. நன்றின்கிருத்திகா

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...