பொழுதும் இனிமையே
விடியல் பொழுதில் தூய காற்றை உள்வாங்கி செல்லும் நடைபயிற்சியும்
காலைபொழுதில் ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாய் கதிரவனின் ஒளியை சுவாசித்து கொண்டே அருந்தும் தேநீரும்
உச்சி பொழுதில் சாலையில் நடமாட தயக்கம் கொண்டு என்னுள் புகுந்த மூடத்தனமும்
மாலை பொழுதில் செங்கதிர்கள் விரிக்க பிள்ளைகளை பள்ளி விட்டு வீடு அழைத்து வருவதும்
அந்தி பொழுதில் கதிரவன் அழகை மறைக்க ரசித்தவாறே வீட்டில் விளக்கு ஏற்றுவதும்
இரவு பொழுதின் மடியில் பிள்ளைகளாய் நிலவின் குளிர்ச்சியை கண்டு மகிழ்வதும்
பொழுதொன்றுக்கு மருந்து என்பது மறைந்து மூன்று வேளையாய் சுருங்கியதும்
தற்பொழுது வாழும் வாழ்க்கையும்
எப்பொழுதும் உறுதி கொள்ளும் மனதும்
அப்பொழுதும் பிறரை நோகடிக்கா குணமும்
இப்பொழுதில் வேண்டுகிறேன் இறைவா!

No comments:
Post a Comment