உள்ள வரை
செடியில் உள்ள பூவை காதலித்தேன் அதன் மொட்டுக்களையும் நேசித்தேன் அது வாடாத வரை
என் கவிதையை காதலித்தேன் அதற்கு வந்த விமர்சனத்தையும் ரசித்தேன் கவிதையில் உள்ள பிழைகள் தெரியாத வரை
தண்ணீரை காதலித்தேன் அதன் நிறத்தையும் நேசித்தேன் என் தாகம் தீர்க்கும் வரை
என் மனதை காதலித்தேன் என் பேச்சையும் வியந்தேன் அது பிறரை புண்படுத்தாத வரை
என் வயதை காதலித்தேன் வளர்ச்சியையும் நேசித்தேன் அதன் நினைவுகள் நீங்காத வரை
மனித பிறப்பை காதலித்தேன் மனிதனாக மாறவும் ஆசைப்பட்டேன் என் உயிர் நீங்காத வரை
கரு விழியை காதலித்தேன் காட்சியையும் நேசித்தேன் இயற்கையும் மாறாத வரை
காற்றை காதலித்தேன் அதன் அவசியத்தையும் உணர்ந்தேன் அதை நான் மாசுபடுத்தாத வரை
மனைவியை காதலித்தேன் நண்பனையும் நேசித்தேன் இரண்டும் என் விழி விட்டு விலகாத வரை
மழையையும்
காதலித்தேன்
இருளையும்
ரசித்தேன் அவை என்னை துன்புறுத்தாத வரை

No comments:
Post a Comment