ஓட ஓட மூச்சு வாங்குது அது என்னை
தான் துரத்துகிறது. இடையில் அத்தை
வந்து பேசிப்போனாள் இன்னும்
துரத்துகிறது .போகும் வழியில்
பெரியப்பாவிடம் சிறு உரையாடல்
அப்பாடா பஸ் ஏறியாச்சு.துரத்தியது
யானை..அது நின்று மூச்சு வாங்குது.
மறுநாள் அச்சச்சோ விடிந்துவிட்டதா?
அம்மா மணியாகுது வீட்டிலே
தாமதம்.பேருந்தை காணோம்
போச்சு.அப்படி இப்படின்னு தெரு
தெருவாக போனேன் வியர்த்து
போய்.பக்கமாக போன மாதிரி ஆனால்
அதே இடத்தில் ...கல்லூரி ,நண்பர்கள்
எல்லோரும் வந்து வந்து போறாங்க.
இது மாதிரி நடந்ததே இல்லை.
தேர்வை எப்படி விட்டேன்.ஆரம்பித்த
இடத்திலே இருக்கேன் படுக்கையில்...
எல்லாம் கனவு விதவிதமான கலாட்டா
கனவுகள் இன்றும் தேர்வு
எழுதுகிறேன் ,யானை துரத்துகிறது
ஏன் தெரியவில்லை.

No comments:
Post a Comment