இசை எத்தனை முறை கேட்டாலும்
சலிக்காத ஒன்று இசை.அதில் குரலா,
இசையா எதற்கு முதலிடம்
தெரியவில்லை.வானமும் கடலும்
போல் எல்லையில்லா ஓட்டம்
அதைகேட்ட மாத்திரத்தில்
ஒருவரை அடிமையாக்கக் கூடிய
ஒன்று இசை.ஒரு விதமான மயக்கம்
படைப்பவருக்கும்,பருகுபவருக்கும்
உள்ள ஒப்பந்தம் சில மணிநேரம்.
அதை முழுமையாக ஏற்று,
உள்வாங்கியவரால் மட்டுமே பாட
முடியும்.இல்லையேல் அதற்கு உயிர்
இருக்காது .அதை கேட்ப்பவரால்
ரசிக்க முடியாது.பிடித்ததை ரசிக்கும்
போது நேரமே தெரியாது .ஒரு
ஆனந்த அலை இசை அது அடிக்கும்
இடமெல்லாம் ஒருவிதமான அசைவை
உண்டு பண்ணும் அதில் சிறு தூசும்
அசையும் போது இந்த உயிருள்ள உடல்
அசையாதா, உருகாதா என்ன.

அழகான எண்ண அலை வித்யா
ReplyDelete