Tuesday, June 13, 2023

பூவும் பெண்ணும் by Vidhya Nivash

 


நெடுநெடுவென வளர்ந்தாய் ஆனால்

 பூக்கவில்லையே ஆண் இனமோ

 என்று சந்தேகம் மனிதருக்கு, பூச்சிக்கு

 தெரியும் உன் வாசம் நீ மொட்டு

 வைக்கும் முன் உன்னை அரித்து

 குடிக்கொண்டது.எதற்கும் ஒரு

 காலம்வரும் அது வரை பொறுமை

 இல்லா மனிதர்.தினம் ஒன்று

 பூக்கிறேன்.இப்போது தலையில்

 வைத்து ஆடுவர். எதற்கும் உயிர்

 உண்டு, மனம் உண்டு, அழகு உண்டு,

 தனித்தன்மை உண்டு.அது பூத்தால்

 தான் முழுமை பெறுமா? இது செடிக்கு

 மட்டுமில்லை,பெண்ணுக்கும்

 தான்..யார் இல்லை என்றாலும்

 உடையவன் உணர்ந்து உடன்

 நின்றால்  போதும் ..

4 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...