நெடுநெடுவென வளர்ந்தாய் ஆனால்
பூக்கவில்லையே ஆண் இனமோ
என்று சந்தேகம் மனிதருக்கு, பூச்சிக்கு
தெரியும் உன் வாசம் நீ மொட்டு
வைக்கும் முன் உன்னை அரித்து
குடிக்கொண்டது.எதற்கும் ஒரு
காலம்வரும் அது வரை பொறுமை
இல்லா மனிதர்.தினம் ஒன்று
பூக்கிறேன்.இப்போது தலையில்
வைத்து ஆடுவர். எதற்கும் உயிர்
உண்டு, மனம் உண்டு, அழகு உண்டு,
தனித்தன்மை உண்டு.அது பூத்தால்
தான் முழுமை பெறுமா? இது செடிக்கு
மட்டுமில்லை,பெண்ணுக்கும்
தான்..யார் இல்லை என்றாலும்
உடையவன் உணர்ந்து உடன்
நின்றால் போதும் ..

True fact vidhya. Super
ReplyDeleteThank you Veena
ReplyDeleteSuper pa
ReplyDeleteThank you Susila
ReplyDelete