படித்ததில் கேட்டதில் சிந்திக்க
செய்தவை..
எல்லோரும் மனம் என்று
பேசுகின்றனர் அது உண்மையான
அர்த்தம் என்ன? இதில் ஆழ்மனம்
வேறு?
நன்கு குளித்து முடித்து உடலை சுத்தம்
செய்தும் மனதில் தோன்றும் குப்பை
வார்த்தைகள் எங்கிருந்து..நல்ல
வேளையாக ஒரு தடுப்பு இருக்க
நினைப்பது வெளியே தெரிந்தால் ..
அதே போல் விரதம் பூஜை எல்லாம்
முடிக்கும் போது கோபத்தின் உச்சம்
,பல அழுக்கு சிந்தனைகள் ஏன்?
பிறரின் மூட்டைகளை ஏன் நாம்
சுமக்கிறோம்?
ஏய் மனமே சும்மா இரு உனக்கு நேரம்
காலமில்லை பூஜையில்,
கல்யாணத்தில், இறப்பில்
இருக்கிறேன்.நல்லதே நினை என்று
முணுமுணுக்க? எதற்கு தீனிப்போட்டு
வளர்க்கிறோம்..இதை நினைக்காதே
என்று அதையே வளர்க்கிறோம். சும்மா
இரு.. உன்னை எதுமில்லை. இப்படி ஏன் கெட்ட
வார்த்தைகளும் எண்ணங்களும்
வருகிறது?
சிசுவிருந்தே கேட்கும் வார்த்தைகள்
தாய்,சுற்றியுள்ள பலரின்
வாக்குவாதங்களின் பிரதிபலிப்பதாக
இவை..வருக்கால தாய்மாரின்
கவனத்திற்கு ..
அருமையான வாக்கியம்"கடந்த
காலத்தின் கைதிகளாக" ஏன் ?
குழந்தைகள் போல் நிகழ்காலத்தை
ரசிப்போம்.

அருமையான காலத்திற்கு அவசியமான ஒரு பதிவு வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete