காலையும் மாலையும் உன் நினைப்பு
கண்ணே எப்ப வருவாயோ!
வந்த உடன் நிற்பாயோ இல்லை
பறப்பயோ!
பத்து நாட்களுக்கு ஒரு முறை தான்
உன் வருகை ..
கோடையில் இன்னும் தாமதம்..
நட்ட நடுராத்தியெல்லாம் வருகிறாய்!
என்ன வென்று சொல்வது காலையில்
நீ இல்லையேல் வேலை ஒன்றும்
ஓடாதே...
நீ குறைய குறைய மனம் படபடக்கும்
நீ எல்லை கடந்தாலும் மனம்
நிலைகொள்ளாது!
நீ எப்ப வருவாய்...

அருமை. விடை தண்ணீர் என்பது தாங்கள் சொல்ல கேட்டது, அதற்கு முன் அறிய ஆவல்.
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete