அவள் யாரோ? அவள் யாரோ? தன் உடலை கடலில் கரைத்த அவள் யாரோ?
நீலக்கடலில் பிறந்த சிவந்த குழந்தை
அலையில் நினைவலைகள்
அழகில் மூர்ச்சையானது யார்?
நட்பின் அடையாளம் போல்
கேட்டதை தந்து விட்டேன், நிஜத்திலும் நிழலிலும்
இப்படிக்கு நிலவு
போவது எங்கே நிலவும், நீலக்கடலும்
பார்த்தேன்: குளித்தேன்:
குளித்து எழுகையில் காதல் கொண்டேன்
உன்னிடம்; மயங்கினேன் ;
மயங்கி கிடக்கையில்
கையில் கொண்டேன் என் பிள்ளையை
என் பிம்பமாய்;
உன்னிடம் ஒப்படைத்து செல்ல நினைக்கையில் மீண்டும் மயங்கினேன்;
மறுபடியும் இதே
சுழற்சியோ?

அட அட..இது தான் காதல் கொண்ட அலைகள் ஓய்வதில்லையோ?!.. lovely Vidhya
ReplyDeleteநன்றி கிருத்திகா
Delete