காரிருள் எங்கும் கண்ணுக்கு எட்டிய வரை யாருமற்ற இருள் சூழ..
வண்டின் குரல் ஆங்கே ஆங்கே சிந்தி மறைய..
நகரப்புறத்தின் ஒளி மற்றும் ஒலியிருந்து விலகி செல்ல செல்ல...
ஒருபுறம் சூரியன் மணற்குன்றுகள் மேல் ஏறி,இறங்கி தவழ்ந்து வந்து ஒரு கட்டத்தில் மறைந்தது..
அனைவரின் ஆவலை தூண்டும் வண்ணமாக ஆங்கே ஆங்கே வெள்ளி மணிகள் மின்மினியாக மின்னின...
கார்மேகத்தின் நடுவே ..தலைவகுடு எடுத்தார் போல் காரின் விளக்கோளி கீச்சிட்டு செல்கிறது இருளை..
ஆழ்கடலின் அந்தரங்கம் பல அதிசயங்கள் கொண்டது பலரும் அறிந்ததே..
தலைக்கு மேலே உள்ள வான் வெளியில் நடக்கும் அதிசயம் யார் அறிவார்..
தொடரும்...

No comments:
Post a Comment