கரை புரண்டோடும் ஆற்றின் நீரை அள்ளி உடுத்திய படிகளாக..
படித்துறையில் உடல் நனைய மீனை போல் நீந்தி ..
அக்கரையில் உள்ள தென்னையில் ஊஞ்சல் கட்டி விளையாடி..
பருந்தாக உயர பறந்து கோபுரத்தை வட்டமிட..
சில நேரம் சலமற்ற நீராக..
பல நேரம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடும் நீராக..
தடுப்பில் வடியும் நீர் மேல்முகமாக ஏறும் இடத்தில் கார் கூந்தலை விளையாட விட்டு படுத்து புரள..
சலமற்ற நீரில் கால்சலங்கை நடனமாட மானை போல் துள்ளி ஓட ஆசை..

No comments:
Post a Comment