இரண்டும் ஒன்றானால்
பிறப்பும் இறப்பும் ஒன்றானால் உயிருக்கு மதிப்பில்லை
மனமும் மார்க்கமும் ஒன்றானால் பிரிவுக்கு இடமில்லை
தரமும் தாரமும் ஒன்றானால் இழப்பிற்கு வழி இல்லை
தனமும் தானமும் ஒன்றானால் சுயநலத்திற்கு வெற்றி இல்லை
வறுமையும் முதுமையும் ஒன்றானால் தோற்றத்திற்கு பெருமை இல்லை
அழகும் அறிவும் ஒன்றானால் தோல்விக்கு சாதகம் இல்லை

No comments:
Post a Comment