தனிமையில் இருக்கிறோம் என்று நினைத்தாலும் நம்மை சுற்றி வலம் வரும் உயிரினம்
அமைதி பெரியதா? அண்டம் பெரியதா? சிந்தனையில் மூழ்கும் மனிதனும் சிறகடித்து பறக்கும் பறவையும்
தேடுதல் தொடர்கிறது மனிதனுக்கும் பட்சிக்கும், இரண்டுக்கும் இருப்பிடம் இந்த மரமே
இறையை தேடும் மனிதனும்
இரையை தேடும் பறவையும்
வட்ட நிலவின் ஊடே வட்டமிடும் பறவையும் வாட்டத்துடன் மனிதனும்
மனிதனே! என்னை போல் வளைந்து இரு, அடுத்தவர் அமர.
மனிதனே! என்னை போல் பிரகாசமாய் இரு, அடுத்தவர் இருள் நீக்க.
மனிதனே! என்னைப் போல் எளிமையாய் இரு, உன்னுடைய பலம் காக்க
மனிதனே! அனைத்துமாய் இரு, உன்னுடைய நலம் நீடிக்க

No comments:
Post a Comment