என்ன அழகு
தினமும் ஒய்யாரமாக படுத்திருப்பான்
ஒவ்வொரு நாளும் வித விதமாக பல கோனலில்
அவன் படுத்திருப்பதோ கால் மிதியடி
ஆனால் அவனுக்கோ அது பட்டுமெத்தை
பார்ப்பவர் உள்ளம் கவரும் கள்வன்
இல்லை இல்லை குறும்பன்
பல நேரம் வயதை மறந்து சிறு பிள்ளையாக வாழும் நொடிப்பொழுது
சுகமே!
தினமும் இவனை கடக்கும் போது எனோ மனம் இலேசாகுது...

No comments:
Post a Comment