ஒரு நாள் பெய்த மழையில் முளைத்த செடியல்ல நான்
கேள் தவளையே
கல் தரையில் இடுக்கில் தங்கிய சிறு மண்ணில்
என் தோழி மழை துளிர்த்த நீரை குடித்து
மெல்ல வேர் ஊன்றி
தளிர்த்த நம்பிக்கை நாங்கள்
ஆங்காங்கே என் தோழிகளும் படர்ந்துள்ளனர்
நீ என்வென்றால் மழைக்கு ஒதுங்கி
மழைக்கு முன் பின் குரலெழுப்பி
தத்தி தத்தி தாவி தாவி வருகிறாயா

No comments:
Post a Comment