பன்னீர் துளிப்போல் ஆரம்பித்த மழை மேளம் கொட்டுவது போல் கொட்டித் தீர்க்க..
எங்கும் இருள் சூழ ஆங்கங்கே பூச்சிகள் சினுங்க தவளையார் குரல் எழுப்ப ...
புது இடத்தில் உறங்கம் வராமல் குளிரில் உடல் நடுங்க ஆந்தை போல் விழிக்க..
ஒரு வழியாக உறங்க..
அற்புதம் தினமும் அரங்கேருகிறது சூரிய உதயம் அன்று இன்னும் சிறப்பாக...
ரம்மியமான காலை சாரலுடன் உதயமாகும் சூரியன்..
மஞ்சள் வானம் நீல வானை விலக்க ஆங்கங்கே வெள்ளை மேகக் கீரள்கள்..
இருள் விலக பகல் விடிய சூரியன் நடு வானில் சிரிக்க உதயமானது புத்தம்புது காலை...

No comments:
Post a Comment