ஒன்றாய் பூத்த இரு மலர்கள் நாங்கள்
ஒன்றாய் வந்தோம் ஆனால் அவளுக்கென்ன அவசரம் காய்ந்தாள் சீக்கிரம்
தினமும் தேனீ வந்து மொய்க்க வருவோரும் போவோரும் பார்வையில் மொய்க்க
அரும்புகள் அரும்புகிறது காய்கள் காற்றில் கூத்தாடுகிறது
வாண்டுகள் மிதி வண்டியை வைத்து வட்டமிட
பெற்றோர் அங்கும் இங்கும் நோட்டமிட்டு வாயாட நீ இல்லை என்னோடு வம்பு செய்ய..

No comments:
Post a Comment