இரு கைகள் இணைந்து ஒரு பிச்சு கையை உருவாக்க முடியும் எனில்... அதே ஏங்கும் கையையும் காப்பாற்ற முடியும் எனில்...இரு கைகளை சேர்க்க பல கைகள் வந்தது எனில் ... பிரிந்த கைகளை சேர்க்க இந்த பிச்சு கைகள் ஏங்குது எனில்... ஏன் ஒரு கை கூட தாங்க வரவில்லை...
இணைந்த கைகள் பிரியாமல் இருக்க முதலில் வரும் பிஞ்சு கைகளே காரணம் பல நேரங்களில் ...
ஒரு கையின் கதகதப்பில் ஒரு கை மயங்கி கிடக்க இடையில் வந்த சிறு கை பஞ்சு போன்ற பிஞ்சு கை கனவிலும் பிரிவதில்லை..
எத்தனையோ கால மாற்றங்கள் வந்தாலும் நவநாகரீகம் ஆனாலும் உருவில் வளர்ந்தாலும் என்றும் மாறாத ஒரு உறவு தாய் தந்தை பந்தமே ..சேய்யின் பாசமும் அவ்வாறே .இதில் எந்த மாற்றமும் இல்லை.
உன்னை அள்ளி எடுக்க எங்கள் நான்கு கைகள் பத்தாதே...
நாங்கள் ஏங்கும் போது உன் சுண்டு விரல் கொடுப்பாயா....

No comments:
Post a Comment