மதுரத்தை தேடும் மாதுவும்
மாதுவின் மனதை திருடும் மாதவனும் அழகே
கண்ணை மறைத்தாலும் மாதவன் அகிலத்தை மறவாதவன்
சிவந்த கரங்களுக்கு நடுவே நீல வர்ணன்
காந்தாரி அல்ல நான்., என் கண்ணை மறைக்க.
என் விழியால் நீ காண் உலகத்தை
காந்தாரி அல்ல நான்., என் கண்ணை மறைக்க.
என் விழியால் நீ காண் உலகத்தை
காதலால் கண் மறையவில்லை
என் காதலியின் கரங்களால் மறைந்தது
அகிலத்தை அறிந்திலேன் என் காதலியின் காதல் முன்
கண்ணை மறைத்த பின்னும்
காணும் காட்சி அழகு
என் காதலியின் கரங்களுக்கு ஊடே
அதனால் பிறந்த புன்னகையும்
காதலியின் பொன்னகைக்கு ஈடாகுமோ?
மாயவன் கண்களுக்கு தணிக்கையில்லை
காணிக்கையாக்குகிறேன் என் கரங்களை
என் விழி கொண்டு என்னையே கண்காட்சியாய் காண

No comments:
Post a Comment