பயமறியா கன்றுக்குட்டி
அது துள்ளி வரும் போதே
எங்கும் பரபரப்பு
யார் மேல் ஏறுமோ
எதில் துள்ளி குதிக்குமென்று தெரியாது
சிறுப்பிள்ளைகள் போலே கவனத்துடன் கையாளவில்லையேல் ஓரே கலவரம் தான்..
இவைகளே இவ்வாறு என்றால்..
சீறி வரும் காளைகள் எம்மாத்திரம் ..
நாட்டு காளைகள் போல் கம்பீரமான இளவட்டங்கள் எங்கே..
கன்றுக்குட்டி போல் பிள்ளைகளும் செய்வதறியாது துறுதுறுவென இங்கும் அங்கும் அலையும்..
நொடி பொழுதில் அழைக்கும் பலமுறை..

No comments:
Post a Comment