மாடு மேய்க்கும் கண்ணா நீ மரத்தில் அமர்ந்தது ஏனோ?
கண்ணனின் வசதிக்காக
மரம் வளைய
செடிகள் ஆசனமாக
பூக்கள் சாமரம் வீச
காட்சிகள் கட்டுக்குள் சிக்க
அந்த நொடி பொழுதில் பூமி சுற்றுவதை நிற்க கண்ணன் காணும் காட்சி தான் எது?
அதோ வருகிறாள் கண்ணனின் உள்ளம் கவர் காதலி தென்றலாக அவனை தீண்ட
காதலன் தான் காத்திருப்பான் காதலுக்காகவும் காதலிக்காகவும் என்பது நம் மதியால் எழுதப்பட்ட விதியோ?
எக்கால காதலனும் தோற்பான் நிஜத்தில் வருங்கால மனைவியின் வருகைக்காக
இடம், காலமும் ஒரு பொருட்டல்ல அவனுக்கு, காதலியின் அழகுக்கும் அன்புக்கும் முன்னால்

No comments:
Post a Comment