தனிமைக்கு காரணம் சோகமா?
சோகத்தின் விளைவாய் தனிமையா?
காரணம் என்பதே காரணமா சோகத்திற்கும் தனிமைக்கும்
நாளைக்கு என்ன சமைப்பது? என்பதே இல்லத்தரசியின் தனிமை சிந்தனை
தினம் தினம் குடித்து வரும் கணவனிடம் சொல்லாமல் வீட்டை காலி செய்துவிட்டா அவன் கால்கள் எங்கே போகும்? இந்த முயற்சிக்கு பலரையும் கூட்டணி சேர்க்க வேண்டுமே?
புடவை கட்டினால் அழகாய் இருப்பேன் என்று சொன்னான். புடவை அணிந்தேன்
மஞ்சள் நிறம் பிடிக்கும் என்றான் நானும் மஞ்சள் நிறத்திற்கு மாறினேன்
இங்கேயே அமர்ந்திரு வருகிறேன் என்றான்
அமர்ந்து காத்திருக்கிறேன்
ஆனாலும் அவன் வரவேயில்லை சிரித்து பார்த்தேன் சிந்தித்தும் பார்த்தேன்
அவன் சொல்லியிருந்தது போல் என் மேல் எந்த சாமியின் சக்தியும் வரவில்லை

No comments:
Post a Comment