வீணையின் நரம்பை தீண்ட தீண்ட இசையாக
வெடிக்கிறது..
கொடியின் நரம்பு நீள நீள இலைகள்
துளிர்க்கிறது..
தொண்டையின் நரம்பு வெடிக்க வெடிக்க
குரல் அதிர்கிறது...
இலையின் நரம்பு பரவ பரவ அது அகலமாகிறது
பூவின் நரம்பு அதை பளிச்சென காட்டும்
கண்ணின் நரம்பு காண்போருக்கு தெரியும்
நரம்புகள் பிண்ண பிண்ண உருப்பெறும்
நரம்பில்லாத நாக்கு மட்டும் உடலின் நரம்புகள்
தூண்ட தூண்ட கோபத்தில் புரளுவது ஏன் ?

ஆம். உண்மை வித்யா. எல்லா இடத்திலும் விரியும் நரம்புகள் நாக்கில் மட்டும் தடம் மாறுகிறது
ReplyDelete😊👍
ReplyDelete