சிவப்பு கல் மெத்தையில் பல வண்ண
கற்கள் அலங்கரிக்க கூடையில்
செடிகள் வளர்ந்து நிற்க
அனைத்தும் செயற்கையான
பெட்டியில் துள்ளும் ஈர் உயிர்கள்
இதற்கு மத்தியில் அமைதியாக
தியானத்தில் புத்தர்..
புத்தர் இருப்பது கண்ணாடிப் பெட்டின்
உள்ளேவா?வெளியேவா?
பார்க்க உள்ளிருந்தாலும் அவர்
இருப்பதோ வெளியே சுவற்றில்..
பல நேரம் நாமும் சிலதில்
உள்ளிருப்பது போன்று
இருந்தாலும் உற்றுப்பார்த்தால் தான்
தெரியும் நாம் இருப்பது வெளியில் ..
சில நேரம் சிலையாக (செயற்கையாக உருவாக்கப்பட்ட)
பல நேரம் உயிராக (இயற்கையில் உருவான)
வளம் வந்தாலும் நம் இடத்தை நாம்
அறிந்தால் சுகமே..

கடைசி வரி அருமை
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete