Wednesday, March 22, 2023

சிலையா? உயிரா? by Vidhya Nivash

 


சிவப்பு கல் மெத்தையில் பல வண்ண

 கற்கள் அலங்கரிக்க கூடையில்

 செடிகள் வளர்ந்து நிற்க

அனைத்தும் செயற்கையான

 பெட்டியில் துள்ளும் ஈர் உயிர்கள்

இதற்கு மத்தியில் அமைதியாக

 தியானத்தில் புத்தர்..

புத்தர் இருப்பது கண்ணாடிப் பெட்டின் 

 உள்ளேவா?வெளியேவா?

பார்க்க உள்ளிருந்தாலும் அவர்

 இருப்பதோ வெளியே சுவற்றில்..

பல நேரம் நாமும் சிலதில்

 உள்ளிருப்பது போன்று

 இருந்தாலும் உற்றுப்பார்த்தால் தான்

 தெரியும் நாம் இருப்பது வெளியில் ..

சில நேரம் சிலையாக (செயற்கையாக உருவாக்கப்பட்ட)

பல நேரம் உயிராக (இயற்கையில் உருவான)

வளம் வந்தாலும் நம் இடத்தை நாம்

 அறிந்தால் சுகமே..



2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...