Friday, March 24, 2023

வர்ணங்கள் by Vidhya Nivash



சிறுவயதிலிருந்து பல

 வண்ணங்களால் ஈர்க்கப்பட்டாலும்..


மனதின் பக்குவத்தால் உணர்ந்த

வண்ணங்கள் எத்தனை நிறைவை 

தருகின்றன


கார் கூந்தலை விட வெள்ளி

 கம்பிகள் அழகு அதிலும் மருதாணி

 பூசியது ஒரு வகை


வண்ண வண்ண ஆடைகளை விட

 வெண்மையும் கருமையும் ஒரு புதிய

 தோற்றத்தை, கம்பீரத்தை ,தனி 

இடத்தையும் தருகிறதில்லை..

பார்க்கும் யாவையும் மனதின் கண்

 புதுப்புது வண்ணங்களை

இயற்கையின் வர்ணஜாலங்களை

 அள்ளித்தெளிக்க அசந்து போனவை

 மயில் கழுத்தின்

 வண்ணம்,செங்காந்தல் மலரின்

 சிவப்பு,ஒவ்வொரு மணிக்கு மாறும்

 வானின் வண்ணம் குறிப்பாக சூரியன் வருகை,மறைவு
 
செக்கச்சிவந்த மஞ்சள்,  நீலம்..

குயிலின் கருமை

புறாவின் வெண்மை
 
பன்னீர் ரோஜாவின் இளஞ்சிவப்பு

அடுக்கிக்கொண்டே போகலாம்..

செறிவூட்டப்பட்ட வண்ணங்கள்

 முன்னே எண்ணங்களை

 வண்ணங்களால் தட்டிச்செல்லும்

 இயற்கையின் முன் அடிமையே...


2 comments:

  1. உண்மை. நம் வாழ்வின் ஒன்றுபட்ட வர்ணங்களும் அதன் மகத்துவமும் சொல்லி மாளாது. அருமை வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...