Thursday, June 29, 2023

இந்த வார படமும் கருத்தும் by Vidhya Nivash

 



காதோடு தான் நான் பேசுவேன் என்ற

 பாடல் தான் ஞாபகம் வருகிறது.

 தாயின் கருப்பையில் குழந்தை விடும்

 மூச்சை கேட்கும் தாய்க்கு மட்டுமே

 புரியும் குழந்தையின் மூச்சில்

 இருக்கும் ராகம்.அம்மா பசிக்குது,

அம்மா இது வேண்டாம்,கொஞ்சம்

 தள்ளி போங்க காது வலிக்குது,அப்பா

 சொல்லும் ரகசியத்தை கொஞ்சம்

 சொல்லு அம்மா சொல்.


 பல ரகசியம் இருக்கு உன் காதை

மட்டும் கொஞ்சம் நேரம் கடன் கொடு

 என் வசம் காதலியே!!


கருவறையின் காதுகள் மட்டுமே

 கேட்கும் பூமியில் காலடி பதிக்காமல்

 கலைந்துச் செல்லும் சிசுவின்

 குரல்கள்.


குழந்தையின் குரல் சரி..நெடுநாளாக

 புலம்பும் பூமித்தாயின் குரலை யார்

 கேட்ப்பார்?



2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...