சின்னது முதல் பெரியது வரை மிக
துல்லியமாக கண்ணாடி போல்
தெரிந்த தண்ணீரில் இவ்வளவு
மீன்களும் எங்கிருந்தது சின்ன
சலனத்தில் உணவை வேட்டையாட
கரையில் ஒதுங்கிய கண்ணாடி
மீன்கள் உள்ளம் கவரும் அழகு
கூட்டத்தில் ஒன்றை ஒன்று மோதாமல்
அழகாக விலகிச் செல்ல தேடியது
கிடைக்கவில்லை என்றதும் வந்த
இடம் தெரியாமல் மறைய பார்க்கும்
நமக்கு கண்வித்தை தான் ..
இரையை போட்ட மாத்திரத்தில் படை
எடுத்து வந்தது. துணைக்கு நண்டு
சிண்டு ,தலைவா முகர்ந்ததில் அது
காய்ந்து போன ரொட்டி துண்டங்கள்
.இதை உண்பதற்கு நம் மக்கிபோன
உணவே மேல்.படையை திருப்பி
நாட்டிற்கு விடுங்க.நொடியில் மறைந்த
படை .
இரை கரை படை மறை.

அழகும் உண்மையும்
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete