ஜோடி சேர்ந்த நாள் மட்டுமே கைப்பிடித்தேன் அவளை, காரணம் தெரியாமல் விலக்கி விட்டாள், அதனால் நான் விலகியும் விட்டேன் அவளிடமிருந்து
முன் வைக்கும் காலை பின் வைக்க வேண்டாமென்று நினைத்தோ ஏனோ காளை பின் தொடர்கிறது
நான் மறுத்த வேளையிலும் எனை மணந்தான், மணந்த பின் மறந்தான், ஏன் என்ற கேள்விக்கு பதிலும் சொல்ல மறுத்தான்
மண நாளில் கைப்பிடித்தவனுக்கு அவள் மரணம் பதிலானது, அவள் மனம் வேறோருவரிடத்தில் தஞ்சம் கொண்திருந்ததால்
மண நாளில் கொண்ட மாலை என் கழுத்தை பதம் பார்த்தது கோடை காலத்தில், தவித்தேன் தவிர்த்தேன் கழற்றி வைக்க முடியாமல் , மனம் இல்லாமல்
மண நாளில் கைபிடித்தவனுக்கு சொந்தமானது பச்சை கிளியின் கரங்கள் மட்டும்

No comments:
Post a Comment