Tuesday, May 23, 2023

படமும் கவிதையும் கதையும் by Veena Shankar

  


சின்னஞ்சிறு குஞ்சுகளுக்கு குடையானதோ கோழி(தா)யின் இறக்கை


வாழ்க்கை பாடத்தில் முதல் அத்தியாயம் சூழ்நிலையை சமாளிப்பது எப்படி என்று சொல்லித் தருகிறது தாய் கோழி



காலநிலை மாறலாம்


மனிதர்களிடம் சிக்கலாம்


என்னிடமிருந்து பிரிய நேரிடலாம்


இரை தேடுவதில் சிரமம் ஏற்படலாம்


ஆனாலும் குப்பை கிளறி உணவு சேகரித்து உண்பதை விட்டு விடாதீர்கள். உழைப்பே உயர்வு தரும் என்கிறது தாய் கோழி


திண்டாட்டத்திலும் கொண்டாட்டம் தாயின் அரவணைப்பில் ஆட்டம் போட்ட பிஞ்சுக்கால்கள்


முகம் காட்டா குஞ்சுகள் அம்மாவின் உடலில் எதை தேடுகின்றன?


 தாங்கள் வந்த இடத்தையா? 


இல்லை 


மழையில் நினைந்து அசந்து விட்டாதால் போடும் குட்டி உறக்கமா?  


இல்லை 


தங்களை காப்பாற்ற தாய் இருக்கிறாள் என்ற நினைப்பா?


இல்லை 


தாயின் உடல்சூட்டில் குளிர் காய்கின்ற எண்ணமா?


இல்லை

எதிரிகள் வந்துவிட்டதால் அங்கே தஞ்சாமா?


அதன் பாஷை தெரிந்திருந்தால் அறிந்து கொண்டிருப்பேன் அந்த ரகசியத்தை, 

நானும் அதனிடம் இல்லாத உறவை உயிர்த்திருப்பேன்.


 "வா! வா! சீக்கிரம், யாராவது பார்த்து விட போகிறார்கள்" என்றே தன் ஒவ்வொரு குஞ்சையும் வாரி தன்னிடம் வர வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது தாய் கோழிக்கு. "அம்மா! இவ்வளவு அவசரமா நாம் எங்கே போகிறோம்?" என்று கேட்ட ஒரு குஞ்சுக்கு தன் முறைப்பை பதிலாக சொன்னது தாய். 


சிறிது தூரம் அமைதியான நடையோடு தாயை தொடர்ந்தன குஞ்சுகள். மறுபடியும் இன்னொரு குஞ்சு தங்களுடைய பயணத்தின் காரணம் அறிய தாயிடம் வினவ, ஏதோ முணுமுணுத்த தாயை மேலும் கீழும் பார்த்தது. மீண்டும் மௌன நடை பயணம். அதற்குள் மேகம் திரள மழைக்கான அறிகுறி. தாய் குஞ்சுகளிடம் சொன்னது, "இனி யாரும் எந்த கேள்வியும் கேட்க கூடாது. மழை வருவதற்குள் நம் இடத்தை அடைய வேண்டும் " என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய இடி மண்ணில் இறங்க, தலை தெறிக்க நாலா பக்கங்களிலும் குஞ்சுகள் சிதறி ஓட, தாய் மட்டும் தனி மரமானது. அங்கே தாய்க்கு அனுபவம் பேசியது. 


மறுபடியும் தன் பாஷையில் குழந்தைகளை அழைக்க, ஒவ்வொன்றாக தலையை வெளி காட்டி பயணம் தொடர்ந்தது.. ஆனால் ஓரிரு நிமிடங்களில் பயணம் தடைபட மழை பொழிய காத்திருந்தது. இம்முறை ஏது வந்தாலும் தான் பார்த்து கொள்வதாக தாய் வாக்கு அளிக்க தாயுடன் அமைதிப் பயணம்.  


லேசான சாரலில் தொடங்கி மழை வர ஆரம்பிப்பதற்கு முன்னால் கோழி கூட்டம் நினைந்து போய்விட, குஞ்சுகளை தன் இறக்கை விரித்து தஞ்சமடைய செய்தது தாய் கோழி.


 அப்போதும் தங்கள் பயணத்திற்கான சந்தேகம் அவைகளுக்குள் எழ, தாய் கோழியே விடை சொன்னது. "நான் சொல்லும் போதே சீக்கிரம் புறப்பட்டு இருந்தால் இந்நேரம் வேறு வீட்டிற்கு போயிருக்கலாம்" என்று சொல்ல , "ஏன் நாம் இருந்த இடமே நன்றாக தானே இருந்தது. ? பிறகு எதற்கு நாம் வேறு வீட்டிற்கு போக வேண்டும் ?" என்று ஒரு குஞ்சு கேட்க, "இல்லைம்மா. நாம அங்க இருந்தா நான் இறந்து போயிருப்பேன். நாளைக்கு என்னை சாமிக்கு பலி கொடுக்கிறதா அவர்கள் பேசிக் கொண்டார்கள். என் உயிருக்கு நான் பயப்படவில்லை. ஆனால் நீங்கள் சிறியவர்கள். உங்களை இப்ப ஒன்றும் செய்யமாட்டார்கள். நான் உயிர் விட்டபிறகு உங்களை யார் காப்பாற்றுவார்கள். அப்பாவிற்கு கஷ்டம் தானே? அதான் உங்களை அழைத்துக் கொண்டு வேறு இடத்திற்கு செல்ல முடிவு செஞ்சேன். அப்பாவுக்கு கூட சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துல அப்பாவும் வந்துடுவார் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குஞ்சுகளின் தந்தையான சேவலாரும் வந்து சேர்ந்தார்.


தற்போது மழையின் காரணமாய் நடைக்கு விடுப்பு கொடுத்து பக்கத்திலிருந்த கோயிலில் தஞ்சமடைந்தனர் குடும்பத்தார்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...