எது பொக்கிஷம்?
குழந்தை பருவத்து ஆடைகளை பத்திரமாக வைத்திருப்பதும் பொக்கிஷமா?
அறியாத வயதில் தெரியாமல் கிறுக்கிய படத்தை ஓவியம் என்று காப்பதும் பொக்கிஷமா?
வீட்டில் நம் இளவரசி கால் தடம் படித்த இடமும் பொக்கிஷமா?
பள்ளி காலத்தில் நாம் எடுக்கும் குழு புகைப்படமும் பொக்கிஷமா?
நம் தனித்துவத்தை உணரச் செய்யும் அந்த நாளும் பொக்கிஷமா?
நம் ஸ்தானத்தை உலகம் அறியச் செய்யும் அந்த தருணமும் பொக்கிஷமா?
இளவயதில் முதன் முதலில் பகிர்ந்த காதல் கடிதமும் பொக்கிஷமா?
புத்தகத்தின் நடுவே சிறையிலிட்ட அந்த மயிலிறகும் பொக்கிஷமா?
பிடித்த ஆடையை பத்திரப்படுத்தி வைப்பதும் பொக்கிஷமா?
ஆறடி நிலமே சொந்தமானாலும் சலிக்காமல் ஆசைப்பட்டு குவிக்கும் சொத்தும் பொக்கிஷமா?
எது தான் பொக்கிஷம் ?
வயதான பெற்றோரை முதியோர் விடுதியில் விடுவதை விட அவர்களை நம் கைக்குள்ளே காப்பது தான் நம் பொக்கிஷம்.
இதில் ஆண் பெண் பேதமில்லை.
இருக்கும் வரை உழைப்பை கசக்கி பிழிந்து அவர்களை இழந்த பிறகு அழுவதில் இல்லை நம் உணர்ச்சி.
இழந்ததை மீட்டு தர மீண்டும் அவர்கள் பிறந்து பொக்கிஷமாக மாறும் வாய்ப்பும் இல்லை.

No comments:
Post a Comment