கிறுக்கல்கள்
நம் சிந்தனையை திசை திருப்ப உருவான கிறுக்கல்களும்
தூசியில் நம் மனம் போல ஓர் வடிவம் உருபெற எழும் கிறுக்கல்களும்
வீடு கட்டும் மணலில் கை விரல்கள் சுழல பதிக்கும் கிறுக்கல்களும்
கடல் அலைகளுக்கு நடுவே எழுதும் பெயரும் மனம் மகிழ வரும் கிறுக்கல்களும்
வகுப்பு நேரத்தில் புத்தகத்தில் நம்மை மறந்து வடிக்கும் கிறுக்கல்களும்
முகம் பார்க்கும் கண்ணாடியில் அழகு சாதன பொருட்கள் கொண்டு எண்ணம் வண்ணமாக மாறும் கிறுக்கல்களும்
தன்னை ஆசானாக நினைத்து பிஞ்சு விரல்கள் கொண்டு கரும்பலகையில் நடனமாடும் மழலை செல்வங்களின் கிறுக்கல்களும்
நீர்த்திவலைகளை ஒன்றிணைத்து நாம் ரசித்து வரையும் கிறுக்கல்களும்
தரையில் நீரில் தாண்டவம் காட்டி வரையும் கோலங்களும் கிறுக்கல்களும்
வெண்பனியில் உருவாக்கிய மாயையில் எழுதும் கிறுக்கல்களும்
மறந்து போய்விடுமோ என்றெண்ணி சுவரில் ஆக்கிரமித்து இருக்கும் சித்திர எழுத்துக்களும் கிறுக்கல்களே!
இந்த கிறுக்கல்கள் யாவும் நம் நினைவு விட்டு நீங்காத விலை மதிப்பற்றவையே என்றாலும் அந்த நேரத்தில் அந்த கிறுக்கல்களுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்

உண்மை தான்
ReplyDelete👍
Delete