காய்ந்த பூவில் முருங்கைகாய்
மற்றொன்று சாதாரண பூ.முதன்
முறையாக பார்த்தேன்.பாட்டி
வேறுப்படுத்தி காட்டினர்.அது போல்
பலவற்றை உள்ளடக்கிய
இயற்கையை கண்டு வியந்தேன்.
பூக்கும் பூவிலே அது காயா கனியா
என வேறுப்படுத்திய இயற்கை
ஆழ்ந்து சிந்திக்க பல ரகசியங்களை
பதுக்கிய புதையலாக அமைதியில்
ஆழ்ந்து உறங்கும் குழந்தை போல்
ஆத்திரத்தில் தலைவிரித்து ஆடும்
பேயாக மகிழ்ச்சியில்
பூத்துக்கூழுங்கும் மங்கை போல்
அழுக்கையில் ஊரே நனைய பல
வேசங்கள் பூண்டாய் பல ரகசியங்கள்
கொண்டாய். நின்று ரசிக்க பல
வேசங்கள், கோஷங்கள் போட ஐந்து
கோசத்தை அடக்க வேண்டுமோ.

No comments:
Post a Comment