அன்புள்ள அம்மாவிற்கு...
நான் ஜனித்த அந்த முதல் நொடியில்..
நீ என் கை விரல்கள் கோர்க்க..
உணர்ந்தேன் - நான் ..
நீயே என்னை ரட்சிப்பவள் என்று..!!!
நீ என்னை மார்போடு
அணைக்கையில் உணர்ந்தேன் - உன்னுள்ளே
என் இதயம் துடிக்க வைத்தவள் நீயே என்று ....!!
நீ என் உச்சி முகர்ந்து
முதல் முத்தம் தருகையில் உணர்ந்தேன் -
நீயே எனக்கானவள் என்று...!!..
அன்று தொட்டு..
இன்று வரை ..
என் உயிர் தொடரும் நிழலாய் நீ..
உந்தன் அன்பில் உருகியவளாய் நான்..!!!
உன் செல்ல மகளாய்..!!!!
-Kiruthi

No comments:
Post a Comment