சிட்டுக் குருவிகளாக சுற்றித் திரியும்
எண்ணங்கள் சிறு இடம் கிடைத்தால்
போதும் அடைக்கலம் புக. வானுயர
கம்பங்களே எங்கள் புகழிடம்.
கொடியில் ஆடும் இலைகளை போல்
காற்றில் ஆடுவோம் எங்களுக்கு
அதுவே ஊஞ்சல் . சிறு பருக்கை
போதும் பசியாற்ற. உறக்கத்தை தவிர
முழு நேரமும் பாட்டு பாடுவோம்
கேட்பார் இல்லை.சூரியன் எங்கள்
பக்கத்திலே ஆனாலும் சுடுவதில்லை.
எண்ணங்களால் சிட்டுக் குருவியை
வடிக்கலாம்.எண்ணங்களே
சிட்டுக்குருவியானால்..

அழகு சிட்டுக்குருவி
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete