படித்ததில் பிடித்தது மனசே ,ரிலாக்ஸ்
ப்ளீஸ் படிப்பதற்கு மிகவும்
எளிமையான புத்தகம்.ஆசிரியர்
மிகவும் அழகாக,தெளிவாக
கருத்துள்ள சின்ன கதைகளை
கொண்டு படிப்பவருக்கு எளிமையாக
சுருக்கமாக சொல்லிருக்கும் விதம்
அருமை.அன்றாடம் தெளிவில்லாமல்
இருக்கும்,எடுக்கும் ,நடக்கும் பல
நிகழ்வுகளை விளக்கியுள்ளார்.நட்பு,
காதல்,தலைமைப் பொறுப்பு மற்றும்
முக்கியமாக கணவன் மனைவி
உறவை மேம்மைப்படுத்த பல
கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது.
குறிப்பாக பயன்படுத்தும்
வார்த்தைகள்,எல்லையில்லா
காதல்,அக்கறை என ஒரு
பட்டியல்.மனதளவில் கூட எதிர்மறை
சொற்களுக்கு இடம்
கொடுக்காத்தீர்.மிகவும் பிடித்தது
உற்சாகமாகமற்ற காலை விடியல்
செய்வதையே செய்து கடமையாக சில
சமயம் சோர்ந்து போன மனம்.மூளை
சொல்வதை உடல் கேட்க வேண்டு
இல்லையேல் சோகமே.செய்யும்
வேலைகளில் உற்சாகத்தை
உண்டாக்கி ஒவ்வொரு விடியலையும்
மகிழ்ச்சியாக தொடங்குங்க என்று
அழகாக கடைசியாக நிறைய
படியுங்க,சிந்தியுங்க,சளைக்காமல்
வேலைச் செய்யுங்க என்று மனமும்
உடலும் சோர்வு அடையாமல் பேண பல
வழிகள் நிறைந்த புத்தகம்.







No comments:
Post a Comment