Tuesday, May 23, 2023

சப்தம் , என்ன சத்தம் by Veena Shankar



 சப்தம்


ஆழ்ந்த உறக்கம் கொள்ள நினைக்கும் வேளையில் மின்விசிறி எழுப்பும் அதீத சப்தம்


அதனின்று அசையும் நாட்காட்டியின் இசைபாடும் சப்தம்


வேகமாக வீசும் வெளிகாற்றில் அருவி போல் மர இலைகள் ஊடல் கொள்ளும் சப்தம்


அமைதியான நேரத்தில் பல்லிகள் இடும் சப்தம் அதனின் பிறக்கும் மன பயத்தின் சப்தம்


மழை காலங்களில் தவளை எழுப்பும் வகை வகையான சப்தம்


இவை யாவும் மறந்த வேளையில் நம் காதில் ஒலிக்கும் அடுத்தவர் குறட்டை சப்தம்

என்ன சத்தம்?


மனம் பதைபதைத்தது அது என்ன என்று அறிய ஆவல் மேலிட்டது


தருணம் சந்தேகப்பட வைத்தது அருகில் தன்னை அறியாமல் உறங்கியவரிடம்


மின்னலானது அறிவில் எட்டிவிட்டது

காது கொடுத்து கேட்டதும் உண்மை புலப்பட்டது


மனமும் கண்டு கொண்டது அது அடுத்த வீட்டிலிருந்து வெளிப்பட்ட குறட்டை சத்தமென்று

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...