அன்னையர் தின வாழ்த்து
தங்கநகை பூட்டினாலும் அழகு
வெறும் மஞ்சள் கயிறு அணிந்தாலும் அழகு
பல் வரிசை தெரிய சிரித்தாலும் அழகு
புன்சிரிப்பு காட்டினாலும் அழகு
சுடராக ஒளிர்ந்தாலும் அழகு
பிறரை பாசத்தால் உருக வைப்பதிலும் அழகு
கருத்துடன் பேசினாலும் அழகு
காளியாய் மாறினாலும் அழகு
தடபுடலான விருந்தும் அழகு
நாள்தோறும் செய்யும் சிக்கன சமையலும் அழகு
நிதி அமைச்சராய் உருவெடுப்பதும் அழகு
நீதி சொல்லி பிள்ளைகளை வளர்ப்பதும் அழகு
குழந்தைகளுக்கு முன்னுதாரணமாய் திகழ்வதும் அழகு கணவனுக்கு இரண்டாம் தாயாய் மாறுவதும் அழகு
தோட்டத்து பூக்கள் போல தினம் மலர்வது அழகு
பிறருக்காக மாற்றி கொண்ட வாழ்க்கையும் அழகு
பாசத்தை ஊட்டுவதும் அழகு
பாரபட்சம் காட்டாத மனதும் அழகு
சரித்திரம் படைப்பதில் அழகு
சாத்திரம் புரிய வைப்பதில் அழகு
சார்ந்து வாழும் பண்பு அழகு
முகம் கோணா வார்த்தை அழகு
போதவில்லை நேரம் உன்னை போற்ற
உன் மடி சாய்ந்து உன்னை கிரகித்து கொள்ள ஆசை, ஒவ்வொரு குணமாய் கற்றறி்ய ஆசை

No comments:
Post a Comment