மணிமுடியும் பொன்முடிப்பும் தேவையில்லை எனக்கு, என் பிள்ளைக்கு ஒரு கோப்பை பால் போதும் தினம் பருக, வழி வாருமே? விடியல் தருமோ? கலையாகிய என் வேடமும் களையுமோ?
விசிறியின் கைப்பிடியாய் பெண்ணின் உடல்
வார்த்தையாலும் உடையாலும் ஜாலம் காட்டி வீசுவது பெண்ணோ?
அவளை அழகாய் படம் பிடித்தது கலைஞனோ செயற்கை ஒளியோ?
நடனமாடுவது இள வயதாலோ, வாழ்க்கை இருளாலோ?
களிப்பு நடனமாடி காட்டுவது விளம்பரத்திற்கோ?
அவளுடைய வரவு இருளையும் ஒளியாக்கும் கூடத்திற்கோ?
ஒரு புறம் கணவன் வீட்டாரையும் மறுபுறம் பிறந்த வீட்டாரையும் பற்ற இவள் மனம் துடித்தாலும் வெறுப்பையே சம்பாத்தித்தாள் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தன் கணவனின் இழப்பிற்கு பின்
இவ்வளவு வீசினாலும் வாராத காற்று அவள் அணிந்திருந்த உடையிலிருந்து

No comments:
Post a Comment