Friday, May 19, 2023

அலாதியா? சமாதியா? by Veena Shankar

 


மன வலிக்கு மருந்து என்று மனிதன் நினைக்கும் பொருளில் இதுவும் ஒன்றே. மன வலியோடு இதுவும் வளரும் பின்னாளில்


பாதி எரிந்து விட்டதால் உனக்கு மகிழ்ச்சியா? இல்லை நீ விற்று போய் விட்டதால் உன்னை ஈன்றவனுக்கு மகிழ்ச்சியா? இல்லை உன்னை உபயோகித்த மனிதனுக்கு மன மகிழ்ச்சியா? நிறைவாக நிறையோடு உன்னை அனுபவிக்க அதற்குள் மனிதன் போடும் மன திட்டமா?


பாதி கவலை தீர்ந்தது என்றெண்ணி தன் ஆயுளை பாதியாக்கிய மதி கெட்ட மனிதன்.


உன் பாதி ஆயுள் முடிவதற்குள் அனுபவிக்கும் மனிதனின் முழு ஆயுளும் முடியுமோ


மனதை வெள்ளையாக்கும் ஒற்றை வெள்ளை குச்சி


கையில் பிடித்தாலும் உள்ளே இழுத்தாலும் மிகவும் ஆபத்தானவன் இவன்


விடலை பருவத்தில் ஆரம்பிக்கும் நீ விடாது துரத்துவாய் அவன் ஆயுள் முடியும் வரை


காதல் தோல்வியோ?

பிறரை பார்த்து கற்றுக் கொள்வதோ?

ஆனந்தத்தை கொண்டாடவோ?

முன் மாதிரிக்காகவோ?

தன்னை மிகைப்படுத்திக் காட்டவோ?

கவலையை மறக்கவோ?

பிறரை வசீகரிக்கவோ?

விரும்பி தொடங்குவதோ?

நண்பனின் அறிமுகமோ?

ஆழ்ந்து சிந்திக்கவோ?

கற்பனையில் நினையவோ?

கருத்துக்கள் பிறக்கவோ?

புற

அழகுக்காகவோ?

மனதை இலகுவாக்கவோ?

போதைக்காகவோ?


எதற்கு நீ என்னுள் வந்தாய்? காரணம் தெரியா முழிக்கிறேன். உன்னால் நான் அடைந்த இன்பத்தை என் காதலனும் அனுபவிக்க உன்னை அறிமுகமும் செய்தேன். 

உன்னில் என்னை தொலைத்து என்னை நானும் தொலைத்தேனே !


உன்னை உள்ளிழுக்கும் சமையமோ அலாதி ஆனால் நானும் என் வாழ்வும் அங்கேயே சமாதி

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...