இட்லி வரும்
தோசை வரும்
பூரி வரும்
பணியாரம் கூட வரும்
ஆனால் இந்த சப்பாத்தி சூடும் வித்தை
யாருக்காவது தெரிந்தால்
சொல்லவும்..ரொம்ப
கஷ்டம் அப்ப கஷ்டம்.
மாவு பதமாக தான் இருக்குது.கல்லு
கொஞ்சம் சூடு அதிகம் என்றால் மெல்லிய
சப்பாத்தி முறுக்காகிறது. அதுவே
கொஞ்சம் மோத்தமாக போட்டால்
வேகவில்லை. கொஞ்சம்
வேகவிட்டா வரட்டியாக என்ன தான் செய்ய.
பக்குவம் எதிலும் பக்குவம்
சப்பாத்தி தந்த பாடம்
கை பக்குவம்
மன பக்குவம்
அதை சுடும் பக்குவம்
ருசிபதில் கூட பக்குவம்
நிதானமும் தேவை.
நில் கவனி சுடு.

அருமையோ அருமை.
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete