முடிவெடுத்தல் பிரச்சினையை கையாளும் விதம் .தன்னை தானே வருத்தி ஒரு சொல் தாங்காமல் நேர்மையை கைப்பிடித்து பிறரை சார்ந்து பல காலம் வருந்துவர் சிலர்.
சரியான நேரத்தில் எப்படி பேச வேண்டும் யாரிடம் எப்படி நடந்துக்கொண்டால் அது முடியும் என்று எதை பற்றியுமே கவலையில்லாமல் வந்ததை உதறி தள்ளிவிட்டு கம்பீரமாக நான் முடிப்பேன் என்று சிலர்.
எதற்குமே சம்பந்தமில்லை யாரும் கூப்பிட்டு கேட்டால் ஒழிய அது அவர் பிரச்சினை அல்ல. அதன் பின் செய்வது அறியாது நிற்கும் சிலர்.
அவரவர் தன்னை சுற்றி உண்டாக்கிய பிம்பமே அதை காட்டும்.
சூழ்நிலை புரிந்து முடிவெடுக்க தெரிய வேண்டும் இல்லையேல் இதுவும் கடந்து போகும் என்று அமைதி காக்க வேண்டுமோ..

உண்மையான மற்றும் தீர்க்கமான ஆழமான முடிவுதான் உங்களை இதைப்பற்றி எழுத வைத்துள்ளது. அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete