துள்ளிக்குதிக்கும் அலையை பார்க்க
மறந்தேன் காற்றில் அலைமோதி
மங்கையின் மலர்போன்ற முகத்தை
தழுவி காற்றில் விளையாடும்
கூந்தலை கண்டு அசையாமல்
நின்றேன், மயங்கி விழுந்தேன்.
வானுக்கும் கடலுக்கும் நடுவில்
உலகை மறந்து சுதந்திர காற்றை
உடுத்தி என்னை மறந்து தண்ணீரில்
கரையும் நேரம் ..
அம்மா திருத்திய கூந்தல் அழகு
ஒவ்வொருவரின் முகவரி சொல்லும்
கூந்தல் உன் அருமை தெரியாமல்
பலரும் மொட்டை அடித்து அமைதி
தேடுகின்றனர் இரு நிமிடம் உன்னை
கோதினால் போதும்..

அழகிய கூந்தல் வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete