பச்சையிலையில் கருப்புப் புள்ளிகள்
உற்றுப் பார்த்தால் தேனிற வாயால்
மதுரத்தை ருசிக்கும் சிற்றெறும்புகள்
கண்ணை கவர்கின்றன..
வண்ண கலவை நடுவிலே
கண்ணாடிப் போல் உன்னை (உண்மை
)பட்டதில் உன் நிறத்தை பிரபதிக்கும்
ஒற்றை நீர்த்துளி எதில் விழுந்தாலும்
அதுவாக உருப்பெறும் தன்மை
விளக்கும் கண்ணாடி அதை பருகும்
சுற்றத்தார்..
ஒற்றைத் துளியானலும் தேன் துளி
அதன் அருமை தேடுபவருக்கு மட்டுமே
விளங்கும் அதையும் ஒற்றுமையாக
பகிர்ந்து பருகும் அழகு அட அற்புதம்..
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்
அழகு குவியல் .

Wow .. ஒற்றை துளியானாலும் அதன் அருமை தேடுபவருகக்குதான் புரியும் ...நிஜம்..நிதர்சனம்..அருமை Vidhya
ReplyDeleteநன்றி கிருத்திகா
ReplyDelete