காப்பிக்கு வண்ணம், மங்கைக்கு கறுப்பு நிறம்
தாமிர கோப்பையை கை ஏந்தும் தங்கம் கறுப்பு வெள்ளையில் தரும் தரிசனம்
சமையலுக்கு நடுவே தேநீர் இடைவேளை மனதுக்கும் உடலுக்கும்
தூரிகையால் வரைந்த ஒரு தாரகை அதுவும் கறுப்பு வெள்ளையில்
அழகோவியம் என்பதா ?
அடர்ந்த கூந்தலுடையவள் என்பதா?
முகத்தில் புன்சிரிப்பு என்பதா?
புது வரவால் வெட்கப்படுகிறாள் என்பதா?
தலைவனை எழுப்ப கோப்பையோடு செல்கிறாள் என்பதா ?
புது வித்(ந்)தை காண போகிறாள் என்பதா?

அழகான வரிகள் வீணா
ReplyDeleteநன்றி வித்யா
Delete